search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி கவிழ்ந்து டிரைவர் பலிம"

    தொப்பூர் கணவாய் பகுதி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் அர்ஜுனன் (வயது 36), பச்சமுத்து (38). டிரைவர்களான இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கரூருக்கு நெல்லை அரிசியாக மாற்றும் இயந்திரத்தை ஒரு லாரியில் ஏற்றி புறப்பட்டு வந்தனர். 

    அந்த லாரி நேற்று பகல் 1.30 மணியளவில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே வந்தது. அப்போது அங்கு தொடர் விபத்துக்கள் நடைபெறும் இடமான ஆஞ்சநேயர் கோவில் அருகே  வளைவு பகுதியில் வண்டி திரும்பும் போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. 

    இந்த விபத்தில் அர்ஜுனனுக்கு காயம் ஏற்பட்டது. பச்சமுத்து காயம் இன்றி உயிர் தப்பினர். காயமடைந்த அர்ஜுனனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×